தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 33/11 கே.வி. துணை மின் நிலையம், 110/11 கே.வி.யாக ரூ.24 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இதன் துவக்க விழா நிகழ்ச்சிக்கு கும்பகோணம் செயற்பொறியாளர் திருவேங்கடம் தலைமை வகித்தார். பாபநாசம் உதவி செயற்பொறியாளர் கருணாகரன் வரவேற்றார். அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கலைச்செல்வன், பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, ஒன்றியக் கவுன்சிலர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் புதிய மின் நிலையத்தை திறந்து வைத்தார்.