districts

திருவோணத்தில் பாசன வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தஞ்சாவூர், அக்.5 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திரு வோணம் ஒன்றியக் குழு கூட்டம் ஊரணி புரத்தில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் பி.கோவிந்தராஜ் தலைமையில் புத னன்று நடைபெற்றது.  இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், விவ சாயிகள் சங்கம் ஒன்றியத் தலைவர் டி.ஜி.பாலசந்தர், ஒன்றியத் துணைத் தலைவர் கே. ராமசாமி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வெட்டுவாக்கோட்டை ஊராட்சி பொதிய வாய்க்கால், வெள்ளத் தான் விடுதி இரண்டாம் நம்பர் வாய்க்கால், உஞ்சியவிடுதியிலிருந்து காரியாவிடுதி செல்லும் 13 ஆம் நம்பர் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களை தூர்வாரி பாசனத்திற்கு பயன்படும் வகையில் சீரமைத்து தர  வேண்டும்.  விவசாயிகளுக்கு நிபந்தனை யின்றி பயிர்க் கடன் வழங்க வேண்டும். கேரளாவில் நடைபெற உள்ள விவசாயி கள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டி ற்கு கீழவெண்மணியில் இருந்து வரும்  ஜோதிக்கு டிசம்பர் 5 அன்று திருவோணத் தில் வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.