districts

img

நியோ மேக்ஸ் துணை நிதி நிறுவனத்தில் முதலீடு; பணம் திரும்ப கிடைக்காததால் விவசாயி தற்கொலை

தஞ்சாவூர், ஜூலை 2-  தனியார் நிதி நிறு வனத்தில் முதலீடு செய்த விவசாயிக்கு பணம் திரும்ப கிடைக்காததால், விரக்தி யில் விஷம் அருந்தி தற் கொலை செய்துகொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பெலிக்ஸ் ராஜா (41). இவர் மதுரையை தலைமை இடமாகக் கொண்ட நியோ மேக்ஸ் மற்றும் சென்ரியோ நிறுவனங்களின் துணை நிறுவனமான, லிவ்ஸ் மார்ட் ப்ராப்பர்ட்டீஸ் லிமிடெட் என்ற தனியார் நிதி நிறு வனத்தில் பணியாற்றி வரும் சார்லஸ் (தேவகோட்டை), நாகரத்தினம்  (காரைக்குடி), பாலசுப்பிரமணியன் (கோவை) ஆகியோர் மூலம் கடந்த 2019ஆம் ஆண்டு  ரூ.10லட்சம் முதலீடுசெய்தார். 

இந்த நிறுவனத்தில் செய்யப்படும் முதலீடு களுக்கு 24 சதவீத வட்டி வழங்கப்படும். 30 மாதங் களில் முதலீடு செய்யப் பட்ட தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என கவர்ச்சி கரமான அறிவிப்புகளை நிறு வனம் வெளியிட்டிருந்தது.

நிறுவனத்தின் இந்த அறி விப்பினை நம்பி தமிழ கத்தின் பல்வேறு பகுதி களைச் சேர்ந்த நடுத்தர மக்கள் ஆங்காங்கே துவங்கப்பட்ட கிளைகளில் பெருந்தொகையினை முத லீடு செய்தனர். ஆனால் நிறு வனம் தனது முதலீட்டாளர் களுக்கு கூறியபடி தொகை யினை வழங்கவில்லை. இத னால் பாதிக்கப்பட்ட நூற்றுக் கும் மேற்பட்ட முதலீட்டாளர் கள் அளித்த புகாரின் பேரில், மதுரை பொருளாதார குற்றப் பிரிவு தடுப்பு காவல்துறை யினர் வழக்குப் பதிந்து நியோ மேக்ஸ் நிறுவனத்தின் சுமார் ரூ.22 கோடி மதிப் பிலான சொத்துகள், ஆவ ணங்கள் மற்றும் ரொக்கம் உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்ற னர். 

இந்நிலையில் பெலிக்ஸ் ராஜாவுக்கு கூறியபடி வட்டி கொடுக்காததால் தனது உறவினர் ஒருவர் மூலம் நிறு வனத்தை அணுகி முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டதற்கு, நிறுவனத்தின் அடியாட்கள் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. 

தனது சேமிப்பும், நிலத்தை விற்று முதலீடு செய்த பணமும் போய்விட்ட தே என்ற விரக்தியில் கடந்த ஜூன் 26 அன்று விஷம் அருந் திய பெலிக்ஸ் ராஜா, உயி ருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஜூன் 30 அன்று உயிரிழந்தார். அவ ரது உடல் உடற்கூறாய்வுக்கு பின்னர் ஜூலை 1 (திங்கள் கிழமை) அடக்கம் செய்யப் பட்டது. 

இதுகுறித்து பெலிக்ஸ் ராஜாவின் மனைவி மார்க் ரேட் ரோஸ்லின் மேரி (34) கூறுகையில், “தனது கண வர் சாவுக்கு காரணமான வர்களை கைது செய்ய வேண்டும். மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்” என திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய் தார். 

பட்டுக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப் பாளர் பாஸ்கர் உத்தரவின் பேரில், திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் சேரன் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிந்து தலை மறைவாக உள்ள தேவகோட் டையைச் சேர்ந்த சார்லஸ், காரைக்குடி நாகரத்தி னம், கோவை பாலசுப்பிர மணியன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தேடி வரு கின்றனர்.

மேலும் புனல்வாசல் கிராமத்தில் பலர் அதிக வட்டி க்கு ஆசைப்பட்டு நியோ  மேக்ஸ் சார்பு நிறுவனங் களில் பணம் கட்டி ஏமாந்து ள்ளதாக தெரியவந்துள்ளது.