தஞ்சாவூர், பிப்.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது:
பாஜகவின் நிதிநிலை அறிக்கையில் நாங்கள் எதிர்பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவினர் ஒன்றிய ஆட்சியில் உள்ள னர். ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையும் ஏழை மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கக் கூடியதாகத்தான் இருக்கிறது. இந்த இடைக்கால பட்ஜெட்டில், வரவு-செலவு பற்றாக்குறையை குறைத் துள்ளோம் எனக் கூறியுள்ளனர். ஆனால் உண்மையில் அவர்கள் செலவு கள் அனைத்தையும் குறைத்துவிட்ட னர்.
மருத்துவம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றின் நிதியை குறைத்த தைத்தான் செலவை குறைத்துள் ளோம் எனக் கூறியிருக்கின்றனரே தவிர எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும் மக்க ளுக்கு அளிக்கவில்லை. விவசாயி களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி இருக் கிறோம் எனக் கூறிவிட்டு, எண்ணி க்கையைக் குறைத்து விட்டனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரியை விதித்து, அதில் இருக்கிற வருமானத்தைப் பயன்படுத்தி ஏழை, எளிய மக்களுக்கு திட்டங்களை வழங்க வேண்டும். ஆனால் மக்களுக்கான திட்டங்களை வெட்டிவிட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை அளிக்கக்கூடிய பட்ஜெட்டாக உள்ளது இது. இந்த பட்ஜெட் கார்ப்ப ரேட் முதலாளிகளுக்குத்தான் சாதக மாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித் தார்.