பாபநாசம், ஏப்.24 - தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் சுஜாதா விடுத் துள்ள செய்திக் குறிப்பில், ‘கிசான் கிரெடிட் கார்ட்’ திட்டத்தின்கீழ்தான் அனைத்து விவ சாய கடன்களும் வழங்கப்படுகின்றன. தற்போது இந்திய அரசின் மூலமாக வழங்கப்பட்டு வரும் பிஎம் கிசான் கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து விவசாயிகளும் கிசான் கிரடிட் கார்டு திட்டத்தில் இணைந்து இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஏப்.24 முதல் மே 1 வரை கே.சி.சி முனைப்பு இயக்கம் அனைத்து பஞ்சாயத்துகளிலும் நடத்தப்படுகிறது. இதன்படி பிஎம் கிசான் திட்ட பயனாளி, தனது வங்கிக் கிளைக்கு சென்று, தேவைப்ப டும் ஆவணங்களை கொடுத்து, கே.சி.சி திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். கே.சி.சி கார்டு அந்தந்த வங்கி கிளை மூலமாகவே வழங்கப்படும். இத்திட்டம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் விதமாகவே, இந்த ஒரு வாரகால முனைப்பு இயக்கம் அனைத்து கிரா மங்களிலும் வேளாண்மை துறை, ஊரக உள்ளாட்சி துறை மூலம் இணைந்து நடத்தப்படு கிறது என அதில் கூறப் பட்டுள்ளது.