தஞ்சாவூர், மே 25- தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அறிவுரையின்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலர் பணி புரியும் இடங்களில் பாலியல் வன்கொடு மைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின்படி, ‘உள்ளக புகார் குழு’ அமைத்திட வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கும் அரசுத் துறை அலுவலகங்கள், நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், மருத்துவமனை கள், பள்ளி, கல்லூரி, சிறு, குறு நிறுவ னங்கள், அமைப்புசாரா பணியிடங்கள் மற்றும் பெரிய-சிறிய அளவிலான மளிகைக் கடைகள் முதலான அனைத்து பணியிடங்க ளில், பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரி யும் பட்சத்தில் அங்கு ஒருமாத காலத்திற்குள், ‘உள்ளகபுகார் குழு’ அமைத்து அதன் விவரத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ‘உள்ளக புகார் குழு’ அமைக்கப்படாமல் இருந்தாலும், சட்ட விதிமுறைகளை மீறினா லும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்துள்ளார்.