districts

குப்பைகளை உடனே அகற்ற வலியுறுத்தல்

தஞ்சாவூர், நவ.11 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம் கிளைகளின் ஒருங்கிணைந்த கூட்டம் ஏ.முருகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் மற்றும் கட்சி கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கிளைச் செயலாளர்கள் பேசினர். “பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் தெருச் சாலைகளில் மழைநீர் தேங்காதவாறும், குப்பைகளை உடனுக்குடன் அகற்றிடவும், அனைத்துப் பகுதியையும் ஊராட்சி நிர்வாகம், வட்டார மற்றும் தாலுகா நிர்வாகம் பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும். கட்சி கிளைச் செயலாளர்கள் தங்கள் பகுதியினை பார்வையிட்டு, பாதிப்புக்குள்ளாகும் இடங்களைக் கண்டறிந்து, துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அதிகாரிகளிடம் மனு கொடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;