தஞ்சாவூர், நவ.2 - ராஜராஜசோழனின் 1037 ஆவது சதய விழா புதன்கிழமை துவங்கி யது. தஞ்சாவூரில், ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்தி ரத்தில் விமரிசையாக சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு சதய விழா மங்கள் இசை, களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, மேடை நிகழ்வாக சதய விழாக்குழு தலைவர் செல்வம் வரவேற்றார். ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து பேசினார். பின்னர் கருத்தரங்கம், திருமுறை பண்ணிசை, திருமுறையின் திருநடனம், பரத நாட்டியம், நாதசங்கமம், கவியரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சி களுடன் விழா நிறைவு பெற்றது. மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சூரிய நாராய ணன், உதவி ஆணையர் கவிதா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். பின்னர், வியாழக்கிழமை (நவ.3) தருமபுர ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பர மாச்சாரிய சுவாமிகள் திருக்கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல், மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணி வித்தல், திருமுறை ஓதுவார் திருமுறைப்பண்ணுடன் ராஜவீதிகளில் திருமுறைத் திருவீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து, பெருவுடை யாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் பேரபிஷேகம், மகா தீபாரா தனை நடைபெறுகிறது. மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளும், இரவில் ராஜராஜசோழன், உலோகமாதேவி ஐம்பொன் சிலை வீதி உலாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.