தஞ்சாவூர், டிச.19- ஓய்வூதியம் மீதான வரு மான வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆயுள் காப்பீட்டுக் கழக ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தஞ்சாவூர் எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஆயுள் காப்பீட்டுக் கழக ஓய்வூதி யர்கள் சங்கத்தின் தலைவர் டி.ராஜசேகர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க கோட் டத் தலைவர் செல்வராஜ், எல்ஐசி முதல்நிலை அதி காரிகள் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.பாண்டியன், பொது இன்சூரன்ஸ் ஓய்வூதி யர் சங்க மண்டலத் தலை வர் ஜி.மணிவேல் ஆகி யோர் கண்டன உரையாற்றி னர். ஆர்ப்பாட்டத்தில், குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உயர்த்த வேண் டும். ஊதிய உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். அக விலைப்படி பாரபட்சத்தை களைய வேண்டும். 20 ஆண்டுகள் பணி முடித்தவ ருக்கு முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும். 80 வய தைக் கடந்த ஓய்வூதியர் களுக்கு ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். ஓய்வூ தியம் மீதான வருமான வரி யை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண் டும். மூத்த குடிமக்களுக் கான ரயில்வே கட்டண சலு கையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தினர். எல்ஐசி ஊழி யர்கள், ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.