districts

img

கும்பேஸ்வரர் கோயிலில் யானை குளியல் தொட்டி திறப்பு

கும்பகோணம், ஜன.24- தமிழ்நாடு சட்டபேரவை 2021-  2022 அறிவிப்பு எண்.104-ன்படி  திருக்கோயிலில் உள்ள யானை களுக்கு மாதம் இருமுறை மருத்து வப் பரிசோதனை செய்து, மருத்து வரின் ஆலோசனைப்படி மருத்துவ  வசதி, உணவு, குளியல் வளாகம்,  நடைப்பயிற்சி வசதி மற்றும் தேவை யான அனைத்து வசதிகளும் மேம் படுத்தப்படும் என இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்நிலையில் சட்டமன்ற அறி விப்பை நிறைவேற்றும் பொருட்டு,  கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயி லில் ரூ.8,40,000 மதிப்பீட்டில், 29 அடி  நீளம், 29 அடி அகலம் மற்றும் 5 அடி  உயரம், 1,17,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட யானைக் குளியல் தொட்டி யின் கட்டுமானப் பணிகள் தனியார்  நிறுவனத்தின் மூலம் முடிக்கப்பட் டன. இந்த குளியல் தொட்டியை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்  தார்.  முன்னதாக கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனு புரீஸ்வரர் ஆலயத்தில் உபயதா ரர்களால் நன்கொடையாக வழங்  கப்பட்ட சுமார் ரூ.50 லட்சம் மதிப் புள்ள தங்க முலாம் பூசப்பட்ட தேரினை தொடக்கி வைத்தார். இவ்விரு நிகழ்ச்சிகளிலும் மாநி லங்களவை உறுப்பினர் சு.கல்யாண சுந்தரம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பி னர் அன்பழகன், மாநகர மேயர் சர வணன், துணை மேயர் தமிழழ கன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அற நிலையத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மகா சிவராத்திரி விழாவை அந்தந்த திருக்கோயில்கள் நடத்தும்
தஞ்சாவூரில் பெரியகோயில் சார்பில் நடைபெறவுள்ள மகா சிவ ராத்திரி விழாவை (பிப்.18) முன்  னிட்டு, திங்கள்கிழமை மாலை இடம் தேர்வு செய்த பிறகு இந்து சமய  அறநிலையத் துறை அமைச்சர்  பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களி டம் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் மயிலாப்பூர் கபா லீஸ்வரர் கோயில், திருவண்ணா மலை அருணாசலேஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர்  கோயில், கோவை மாவட்டம், பேரூர் பட்டீஸ்வர் கோயில், தஞ்சா வூர் பெரியகோயில் ஆகிய இடங்க ளில் நிகழாண்டு மகா சிவராத்திரி விழா நடைபெறவுள்ளது. தஞ்சாவூரில் பெரியகோயி லுக்கு அருகேயுள்ள திலகர் திடலில்  மகா சிவராத்திரி விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஏறத்தாழ 40,000 முதல் 50,000 பேர் வருவர் என எதிர்பார்க் கப்படுகிறது. ஒரே நேரத்தில் 5,000  பேர் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு  இவ்விழா ஏற்பாடு செய்யப்படு கிறது. இதற்கு தேவையான நிதி திருக்கோயில் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த விழாவை அரசோ, இந்து சமய அறநிலையத் துறையோ நடத்தவில்லை. அந்  தந்த திருக்கோயில்தான் நடத்து கிறது. யானையை நாம் காட்டிலிருந்து கொண்டு வந்து வளர்க்கக் கூடாது. நன்கொடையாளர்கள் யாரேனும் யானையைக் கொடுத்தால் தஞ்சா வூர் பெரியகோயிலில் வளர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம். ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வருவாய் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் குழு அமைக்க அரசாணை வெளியிடப்படும். மற்ற கோயில்களுக்கு மாவட்ட அளவில் அமைக்கப்படும் குழுக்களின் பரிந் துரை அடிப்படையில் நியமனம் செய்யப்படும். இதுவரை 22 மாவட் டங்களில் அறங்காவலர் குழு நிய மனம் செய்யப்பட்டுள்ளது. ஆயி ரத்துக்கும் அதிகமான கோயில் களில் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகரா கலாம் என்ற திட்டத்தின் கீழ் 40-க்கும் அதிகமான கோயில்களில் அர்ச்ச கர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள னர்”. இவ்வாறு அமைச்சர் தெரிவித் தார்.