தஞ்சாவூர், நவ.23- சிஐடியு சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் லோடு வேன் சங்க திறப்பு விழா தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் எஸ்.கார்த்திக் தலைமை வகித்தார். சங்க பெயர்ப் பலகையை மாவட்ட துணை செயலாளர் கே.அன்பு திறந்து வைத்தார். சிஐடியு கொடி யினை மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் ஏற்றி வைத்தார். சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், ஆட்டோ சங்கம் மாநகரச் செயலாளர் ஏ.ராஜா தரைக்கடை சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மணிமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிளை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.