தஞ்சாவூர், பிப்.6 - தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே, பள்ளியில் சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் திட்டியதால், மனமு டைந்த மாணவி வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரத்தநாடு அருகே பருத்தியப்பர்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது 17 வயது மகள் ஒரத்தநாடு தனியார் பள்ளி யில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பள்ளியில் கணித ஆசிரியர் சசிகுமார், சக மாண வர்கள் முன்னிலையில் அந்த மாணவியை திட்டியுள்ளார். இத னால் மனமுடைந்த மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக, பள்ளியில் படிக்கும் சில மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம், “பள்ளியில் கணித ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொள் கிறேன்” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதையடுத்து மாணவியின் சித்தப்பா சிவக்குமார், ஒரத்த நாடு காவல் நிலையத்தில் கணித ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், ஆசிரியர் சசிக்குமார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.