districts

குறுவை தொகுப்பு திட்டத்தில் தஞ்சை மாவட்டத்திற்கு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு

தஞ்சாவூர், ஜூன் 28-  காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நடப்பு குறுவை பருவத்தில் குறுவை  நெல் சாகுபடி பரப்பினை அதிகப் படுத்தவும், தரிசு நிலங்களை சாகு படிக்கு கொண்டு வரவும், பல்வகை  பயிர் சாகுபடியினை ஊக்குவித்திட வும், பரிந்துரைக்கப்பட்ட உயர்  விளைச்சல் நவீன தொழில்நுட்பங் களை கொண்டு நெல் உற்பத்தி திறனை  அதிகப்படுத்தவும், டெல்டா விவசாயி கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்தி டவும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்திடவும் தமிழ்நாடு முதலமைச் சரால் குறுவைத் தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல் சாகுபடியை ஊக்குவித்திட, 50 விழுக் காடு மானியத்தில் சான்று பெற்ற நெல்  விதைகள், 100 விழுக்காடு மானியத்தில்  ரசாயன உரங்கள், மானியத்தில் மாற்றுப் பயிர் சாகுபடிக்கு இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒரு பயனாளிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டும் ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி மற்றும்  அரை மூட்டை பொட்டாஷ் ஆகிய  உரங்கள் நூறு விழுக்காடு மானியத்தில்  வழங்கப்பட உள்ளன. குறுவைப்  பருவத்தில் மாற்றுப் பயிர்களான  சிறுதானியங்கள், பயறுவகை மற்றும்  எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி  செய்யும் விவசாயிகளுக்கு விதைகள்  அடங்கிய தொகுப்பாக பொதுப் பிரி வினருக்கு 50 விழுக்காடு மானியம், ஆதி திராவிடர் பிரிவினருக்கு 70 விழுக்காடு  மானியம் வழங்கப்பட உள்ளது.

பயன்பெற விரும்பும் விவசாயிகள்  பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை  ஆகியவற்றை பதிவேற்றம் செய்து,  உழவன் செயலி மூலம் பதிவு செய்து  கொள்ளலாம். அல்லது வேளாண்மை  விரிவாக்க மையம் மற்றும் வட்டார  வேளாண்மை உதவி இயக்குநர் அலுவ லகத்தை அணுகி உரிய விண்ணப்ப  படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப் பித்திடலாம்.  இத்திட்டம் தொடர்பாக  விவசாயிகள் தொடர்பு கொள்வதற்கு,  அனைத்து வட்டார வேளாண்மை விரி வாக்க மையங்கள் மற்றும் துணை  வேளாண்மை விரிவாக்க மையங்களில்  குறுவைத் தொகுப்புத் திட்ட உதவி  மையம் அமைக்கப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக தொலை பேசி எண் 04362-267679 மற்றும் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் தஞ்சாவூர் -  வேளாண்மை பிரிவு 04362- 230121-ஐ தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்துள்ளார்.

;