தஞ்சாவூர், ஜூன் 4- திருவையாறு நகரில் போக்குவரத்து நெருக்க டிக்கு தீர்வு காண வேண்டு மென அனைத்து துறை ஓய்வூ தியர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின், தஞ்சாவூர் மாவட்டம், திரு வையாறு வட்ட நான்காவது மாநாடு சிங்காரவேலு தலை மையில் திருவையாறு சீனி வாசராவ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திர சேகரன் சிறப்புரையாற்றி னார். இதில் தலைவராக சிங்காரவேலு, செயலாள ராக ராஜகோபால், பொரு ளாளராக ராஜாங்கம் ஆகி யோர் தேர்வு செய்யப்பட் டனர். கூட்டத்தில், “புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும். மத்திய அரசு வழங்கியது போல் பஞ்சப் படியை அதே தேதியில் நிலுவையின்றி, ரொக்கமாக வழங்க வேண்டும். திருவையாறு பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு, கும்பகோ ணம் முதன்மைச் சாலை யில் போக்குவரத்து நெருக்கடி இருப்பதால் சாலையை விரிவுபடுத்த வேண்டும் அல்லது மாற்று வழி ஏற்படுத்த வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.