districts

img

பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் தேர் வீதி உலா வருவதில்லை

தஞ்சாவூர், ஜூலை 27-  தஞ்சாவூர் தாலுகா, வல்லம் பேரூராட்சிக்குட்பட்ட இந்து சமய  அறநிலையத் துறைக்கு சொந்த மான ஏகவுரியம்மன் கோயில், முத்து மாரியம்மன், சுப்ரமணிய சுவாமி கோவில்களின் திருவிழாக் காலங்களில், தேர் வீதி உலா பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு தொடர்ச்சியாக வரு வதில்லை.  ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று நடைபெறும் திருவிழாவில், பட்டியல்  சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறை வேற்றப்படாமல் உள்ளது.  

இந்நிலையில், சனிக்கிழமை இது தொ டர்பான கோரிக்கைகளோடு, வல்லம் பகுதி யில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்ட அலுவலகத்திற்கு வந்திருந்த பட்டி யல் சமூக மக்கள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம், “திருவிழா காலங்களில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும்  பகுதிக்கு தேர் வருவதில்லை” என்ற தகவலை  தெரிவித்தனர்.  இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் பி.செந்தில்குமார்,  தஞ்சாவூர் ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செய லாளர் ஆர்.கலைச்செல்வி, மாவட்டத் தலை வர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  

இதில், உடனடியாக மாவட்ட ஆட்சியர்,  வருவாய் கோட்டாட்சியரைச் சந்தித்து மனு  கொடுப்பது எனவும், ஜூலை 30 (செவ்வாய்) அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி - சிபிஎம் சார்பில், பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களோடு இணைந்து, தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சனிக்கிழமை தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவி யாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக  உதவியாளர் ஆகியோரை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது.