தஞ்சாவூர், நவ.16- மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் கடலோரப் பகுதியில் சாகர் கவாச் பாது காப்பு ஒத்திகை நடைபெற்றது. கடலோரப் பகுதிகளில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் வகையிலும், சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத் தும் வகையிலும், கடல்வழியாக போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் வகையிலும், ஆண்டுக்கு இருமுறை என, 6 மாதங்க ளுக்கு ஒருமுறை ‘சாகர் கவாச்’ என்ற பாது காப்பு ஒத்திகை கடலோர காவல் படை யால் நடத்தப்படுகிறது. அந்த வகையில், பட்டுக்கோட்டை கட லோரக் காவல் படை டி.எஸ்.பி பிரான்சிஸ் உத்தரவின் பேரில், ஆய்வாளர் மஞ்சுளா தலைமையில், உதவி ஆய்வாளர் சுப்பிர மணியன், சிறப்பு காவல் உதவியாளர் அய்யப்பசாமி, காவலர் வசந்த் ஆகியோர் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதி யில், கடலுக்குள் சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஒத்திகை செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றன. இதில், கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி னால் அவர்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கடலோரக் காவல் குழுமத்தினர், தங் கள் ரோந்துப் படகின் மூலம் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வரும் படகுகளை பரி சோதனை செய்தனர். அப்போது படகின் பதிவு எண், மீனவர்களுக்கு அடையாள அட்டை உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், கடல் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமாக யாரேனும் தென்பட்டால், உட னடியாக கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையொட்டி, திருவாரூர் மாவட்ட எல்லையான தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் இருந்து, புதுக்கோட்டை மாவட்ட எல்லை தொடக்கமான கட்டுமாவடி வரை ஆங்காங்கே தடுப்பரண் அமைத்து, அந்த வழியாக சென்று வரும் வாகனங்களை சோதனையிட்டனர். இந்தச் சோதனையில் தீவிரவாதத் தடுப்பு, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை முக்கிய அம்சமாக இடம்பிடித்தது. ஒத்திகையில், காவல் துறையினர், கடலோர காவல் குழுமத்தினர், தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர், மீனவ பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.