districts

img

இப்தார் நோன்பு திறப்பு

பாபநாசம், மார்ச் 30-  தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த ராஜகிரி மதரஸாயே ஹிதாயத்துன் நிஸ் வான் பள்ளியில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.  பெரிய பள்ளிவாசல் இமாம் முஹம்மது இஸ்மாயில் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பாபநாசம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் துணைத்தலைவர் ஹாஜாமைதீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கௌரவ ஆலோசகர் அப்துல் ரவூப், ராஜகிரி பெரிய பள்ளிவாசல் பரிபா லன சபை தலைவர் யூசுப்அலி, ஆர்டிபி கல்லூரி தாளாளர் தாவூத்பாட்சா, ஜமாத் துல் உலமா சபை மாநில துணைத் தலை வர் ஜியாவுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.