districts

கடைகளில் எலி பசை விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்

தஞ்சாவூர், ஜன.13-  தஞ்சாவூர் ரயிலடியில் தமிழ்நாடு மாசு  கட்டுப்பாட்டு வாரியம், இந்திய செஞ்சிலுவை  சங்கம், கவின்மிகு தஞ்சை இயக்கம் ஆகி யவை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  புகையில்லா போகி விழிப்புணர்வு பேர ணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.  பேரணி காந்திஜி சாலை வழியாக சென்று  அரண்மனை வளாகத்தில் முடிவடைந்தது. இதில், மாநகராட்சி ஆணையர் க.சரவண குமார், மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜிநாதன், மாநகர நல அலுவலர் வீ.சி. சுபாஷ் காந்தி, முதன்மைக் கல்வி அலு வலர் எம்.சிவக்குமார், மாவட்டச் சுற்றுச் சூழல் பொறியாளர் குணசேகரன், சுகாதாரத்  துறைத் துணை இயக்குநர் நமச்சிவாயம், கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவர் ராதிகா மைக்கேல், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்டத் தலைவர் வி.வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி உள்பட பல்வேறு அரசு மருத்து வமனைகளில் அனுமதிக்கப்பட்ட தற்கொலை செய்து கொள்ள முயன்றவர்களில் பலர் எலி பசையை பயன்படுத்தியது தெரி கிறது. இதனால், எலி பசை விற்கக்கூடாது என தமிழ்நாடு அரசு தடை விதித்து அர சாணை வெளியிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் எலி பசை விற்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். எலி  பசை விற்பனை செய்யப்படுகிறதா என்பதை யும் கண்காணிக்கிறோம். விற்பனை செய்யக் கூடிய வணிகர்கள், கடைகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் பொதுமக்கள் புகை யில்லா போகி பண்டிகையைக் கொண்டாட  வேண்டும். தேவையில்லாத பொருள்களை  எரிக்கக்கூடாது. தஞ்சாவூரை மாசில்லா  மாவட்டமாக உருவாக்க வேண்டும்’’ என்றார்.