பேராவூரணி, மார்ச் 2 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவா ணர் அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த, “நான் முதல்வன் - உலகை வெல்லும் இளைய தமிழகம் புதிய திட்டம் எல்இடி திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட் டது. இத்திட்டத்தின் நோக்கம் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவி யல் சிந்தனையில், ஆற்றலில் திறனை மேம்ப டுத்துவதாகும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவர்களின் தனித்திறன்களை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப் படும். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக் கேற்ப பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடிங் மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர் களை கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இதைத் தவிர மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனை வழங்குவதுடன் உடற் பயிற்சி, நடை, உடை, நாகரீகம், மக்களோடு பழகுதல் ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். தமிழர் பண்பாடு, மரபு சார்ந்த விழிப்புணர் மாணவ-மாணவிகளிடம் ஏற்படுத்தப்படும். இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் கண்டு பயனுற்றனர். இதேபோல் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் கு.திராவிடச் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.