districts

வீடுகளுக்கே சென்று மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு

தஞ்சாவூர், ஏப்.18 - தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடுகளுக்கே நேரடியாக சென்று மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து கணக்கெடுக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன.  திங்கள்கிழமை தஞ்சை மாநகராட்சிக் குட்பட்ட ராஜப்பா நகர் 4 ஆவது தெருவில்,  நடைபெற்று வரும் கணக்கெடுக்கும் பணியை  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாற்றுத்திறனாளிகள் தங்கள் உதவிக்கு, 84381-54369, 84381-61369 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று  தெரிவித்தார்.  அப்போது மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் ந.சுவாமிநாதன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட  அலுவலர் தெ.ராஜ்குமார் மற்றும் தஞ்சை வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் உடனி ருந்தனர்.