districts

img

தஞ்சையில் கொட்டித் தீர்த்த மழை ஆயிரம் ஏக்கர் குறுவை நெற் பயிர்கள், 500 ஏக்கர் வாழை பயிர்கள் சேதம்

தஞ்சாவூர், செப்.1-  தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், சுமார் ஆயிரம் ஏக்கரில், அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவ சாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழகத்தில் இந்தாண்டு வட கிழக்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியதால், பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை மதியம் வரை இடைவிடாது மழை பெய்தது. இத னால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடு முறை அளிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  மேலும், தொடர் மழையினால், தஞ்சாவூர் மாவட்டத்தில் மெலட்  டூர், பாபநாசம், திருவிடைமருதுார், கொத்தங்குடி, அன்னத்தோட்டம், புலவர்நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயா ராக இருந்த சுமார் ஆயிரம் ஏக்கர்  குறுவை நெற்பயிர்கள், சாய்ந்து சேதம் அடைந்துள்ளன.  தொடர்ந்து தண்ணீர் வடியாத தால், வயல்களில் சாய்ந்த கதிர்  கள் முளைக்கத் துவங்கியுள்ளதாக வும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்  டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
500 ஏக்கர் வாழை, பயிர்கள் சேதம்
கொள்ளிடம் ஆற்றில் வினா டிக்கு 1 லட்சத்து 88 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும் நிலையில், ஆச்சனூர், மருவூர், வடுககுடி உள்  ளிட்ட கொள்ளிடம் கரையோர கிரா மங்களில் வாழை தோட்டத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் 200 ஏக்கர்  பரப்பளவிலான வாழை மரங்கள்,  தண்ணீரில் மூழ்கியும், சாய்ந்தும் மிதக்கின்றன. மேலும், வேர் அழுகி நோய் தாக்கம் ஏற்பட்டு வாழை மரங்கள் வீணாகி உள்ளதால், மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அத்துடன், நெல்லைப் போல் வாழைக்கும் பயிர் காப்பீடு நடை முறைப்படுத்த வேண்டும். நீரில்  மூழ்கி உள்ள வாழை தோட்டங் களை, தோட்டக்கலை துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும், கொள்ளிடம் கரை யோர கிராமங்களான வீரமாங்குடி, தேவங்குடி, பட்டுக்குடி உள்ளிட்ட கிராமங்களை மூன்றாவது முறை யாக வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அத்துடன் சோளம், வாழை,  கரும்பு உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டி ருந்த பயிர்கள் தண்ணீர் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.
நெல் மூட்டைகள்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்  கோட்டை அருகே நடுவிக் கோட்டை கிராமத்தில் சுமார் 250  ஹெக்டரில் நெல் சாகுபடி செய்யப்  பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு  சுமார் 15 ஆயிரம் நெல் மூட்டை கள் நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில், கொள்முதல் செய்யப்  பட்ட நிலையில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் கொள் முதல் நிலையத்தை அதிகாரிகள் மூடிவிட்டனர்.  இதனால் கடந்த 20 நாட்களாக நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் வைத்துக்கொண்டு விவசாயிகள் இரவு - பகல் என காத்து வருகின்றனர். மேலும், கன மழையினால் பாதி அறுவடை செய்த நிலையில் மீதமுள்ள நெற் பயிர்கள் அறுவடை செய்ய முடியா மல் மழை நீரில் மூழ்கியுள்ளன.