districts

ஜன.26 முதல் தலைக்கவசம் கட்டாயம் தஞ்சை மாவட்ட எஸ்.பி. உத்தரவு

தஞ்சாவூர், ஜன.24-  ஜன.26 ஆம் தேதியிலிருந்து ஏற்க னவே அமலில் உள்ள மோட்டார் வாக னச் சட்டம் மற்றும் விதிகளின்படி, தஞ்சா வூர் மாவட்டத்தில் தலைக்கவசம் அணி யாமல் செல்வோர் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் 2,217 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 537 பேர் சாலை விபத்துகளில் உயிரி ழந்தும், 2,327 பேர் படுகாயம் அடைந்  துள்ளனர். ஒரு உயிர் என்பது தனிப்  பட்ட நபரின் உயிர் அல்ல, அது ஒரு குடும்பத்துக்கும் சமுதாயத்துக்குமான இழப்பு. இந்த இழப்பினால் அந்த குடும்  பத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. பொருளாதார சிக்கலில் சிக்கி மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த இழப்பை வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவதன் மூலம் தவிர்க்கலாம். உங்களது பாதுகாப் புக்காகவும், உங்கள் குடும்பத்தின் பாதுகாப்புக்காகவும் இருசக்கர வாக னம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிய வேண்டியது அவசியம். வாக னம் ஓட்டுபவர் மட்டும் அல்லாது, பின்  னால் அமர்ந்து பயணிப்பவரும் கண்  டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்  டும். ஜன.26 ஆம் தேதியில் இருந்து  ஏற்கனவே அமலில் உள்ள மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் தலைக்கவ சம் அணியாமல் செல்வோர் மீது பார பட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப் படும். எனவே, பொதுமக்கள் அனை வரும் தலைக்கவசத்தினை பயன் படுத்தி தங்கள் உயிரையும், தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.