தஞ்சாவூர், ஜூலை 28- தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்தார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 8-ஆவது வார்டு திமுக உறுப்பினர் இப்ராஹீம் சுல்தா னுக்கு, மேயர், துணை மேயர் ஆகியோர் சால்வை அணிவித்தனர். ஆணையர் சரவ ணக்குமார் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தி னர். தொடர்ந்து திருக்குறள் வாசிக்கப்பட்டு, தூய்மைக்கான உறுதிமொழியை அனை வரும் எடுத்துக் கொண்டனர். புண்ணியமூர்த்தி (திமுக) கீழவாசல் பகுதி யில் தினந்தோறும் 1 மணி நேரம் மட்டுமே குடிநீர் வருகிறது. குடிப்பதற்கே தண்ணீர் இல்லை. நல்ல தரமான குடிநீரை வழங்க வேண்டும் என தெரிவித்தார். செந்தமிழ்ச்செல்வன் (திமுக) வார்டு-1, பள்ளியக்கிரஹாரம், வெண்ணாற்றங்கரை, ஆனந்தவல்லியம்மன் கோயில் வடக்குத்தெரு வில், ஆள்துளைக் கிணறு அமைத்து, நீர்த்தேக்கத்தொட்டியும், பெரிய தெருவில் அங்கன்வாடியும் கட்டித் தரவேண்டும் என தெரிவித்தார். சந்திரசேகர மேத்தா(திமுக) தஞ்சாவூர் நான்கு வீதிகளில், சாக்கடை நீராக ஒடுவதால், அங்கு நடைபெறும் பணிகளை விரைவுப் படுத்த வேண்டும். பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மாநகராட்சி செய்யும் பணிகள் குறித்து மக்களுக்கு தெரியவில்லை என தெரி வித்தார். இதனை தொடர்ந்து கண்ணுக்கினியாள் (அமமுக), பூக்காரத்தெரு வார்டில், பாதாள சாக்கடை கழிவு நீர் சாலைகளில் வழிந்தோடு கிறது. ஒப்பந்தக்காரரிடம் தெரிவித்தும் பணி கள் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த 25 நாட்களாக இது போல் இருப்பதால், கேள்வி கேட்கும் பொதுமக்களை சமாளிக்க முடிய வில்லை என தெரிவித்தார். கே.மணிகண்டன்(அதிமுக) தஞ்சாவூர் மாநகராட்சி முழுவதும் சுகாதார சீர்கேடு பரவும் நிலை அதிகமாக இருக்கிறது. தூய்மை பணியாளர்கள், மக்கும், மக்காத குப்பை தரம்பிரிப்பதால், வார்டுகளில் தூய்மைப் பணி நடைபெறவில்லை. அதனால் குப்பைகளை தரம் பிரிப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி யாளர்களை நியமிக்க வேண்டும் என்றார் இதே போல் குப்பை கிடங்கில் தீவிபத்து நடந்ததால், 10 லாரி குப்பைகள் சென்ற நிலை யில், தற்போது 2 லாரிகள் தான் செல்கிறது. மீதமுள்ள குப்பைகள் அருகிலுள்ள ஊராட்சிப் பகுதிகளில் கொட்டுகின்றனர். இது தொடர்பாக புகாரும் எழுந்துள்ளன. குப்பைக் கிடங்கில் தீத்தடுப்பு உபகரணங்கள் உள்ளனவா, பணிகள் முறையாக நடைபெறுகிறதா என ஆய்வு செய்யவில்லை. இதில் முறைகேடு நடந்துள்ளது. அங்கு உயிரிழந்தவருக்கு என்ன செய்தீர்கள் என தெரிவித்தார். மேயர் சண்.ராமநாதன்: வார்டு தொடர்பாக ஏதேனும் பிரச்சனை என்றால் என்னிடம் எழுதி கொடுத்தால், உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் 15 நாட்களில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். வரும் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை வராத ளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போல், நான்கு வீதிகளில் வரும் 2 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, பிரச்சினை குறையும். தற்போது 14-ஆவது வார்டு முதல் 28-ஆவது வார்டு வரை ரூ. 148 கோடியே 85 லட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரித்துள்ளோம்.
இந்த அறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைத்து, அரசு நிதி ஒதுக்கிய பிறகு பணிகள் மேற்கொள்ளப்படும். குப்பைகளை சேகரிக்க குப்பை தொட்டி களும், தள்ளுவண்டிகளும் விரைவில் வழங்க வுள்ளோம். குப்பைக் கிடங்கை அதிமுக ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளாக எட்டிக்கூட பார்க்க வில்லை. இந்த ஆட்சி வந்தவுடன் கண்கா ணித்து வருகின்றோம்”என்றார். அப்போது ஆணையர் சரவணக்குமார், அதிமுக உறுப்பினர் மணிகண்டனைப் பார்த்து, குப்பைக் கிடங்கின் ஒப்பந்தக்காரர் உங்கள் நண்பர் தான் என்றார். உடனே மணிகண்டன், அமைச்சருக்கு வேண்டியவரான ஒப்பந்தக் காரர், எனக்கு முன்பே, உங்களுக்கு நண்பர் தான் எனவும், அரசியல்வாதிகள் போல் பேசுகிறீர்கள் எனவும் தெரிவித்தார். அப்போது மேயர் சண்.ராமநாதன், கே. மணிகண்டனிடம், உங்களுக்காக அரை மணி நேரம் ஒதுக்க முடியாது என தெரிவித்தார். கே. மணிகண்டன்(அதிமுக), மக்கள் பிரச்சனை களை பற்றி பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தான் தரவேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து மேயர்.சண்ராமநாதன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டன என கூறிவிட்டு, திடீரென பாதியிலேயே எழுந்து சென்றார். இதையடுத்து, பதில் கூறாமல் எழுந்து சென்ற திராணியில்லாத மேயரை கண்டித்து, இக்கூட்டத்தை புறக்கணிக்கின்றோம் என அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் முழக்க மிட்டனர்.