districts

சுழற்கோப்பைக்கான மாபெரும் கபடி போட்டி: முதல் பரிசை பெற்ற திருவாரூர் அணி

தஞ்சாவூர், மார்ச் 14 - தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரம் மின்னொளி அரங்கில், மதன் நினைவு கபடிக் குழுவின் சார்பில் பனங்குட்டித்தோப்பு, சேதுபாவாசத்திரம் கிராமத்தினர் நடத்திய மூன்றாம் ஆண்டு சுழற் கோப்பைக்கான மாபெரும் கபடிப் போட்டி நடைபெற்றது. போட்டிக்கு கிராம தலைவர் ஆர்.கோவிந்தன் தலைமை வகித்தார்.  கபடிப் போட்டிக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் ரொக்கமும், 7 அடி உயர சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரம் ரொக்கமும், 6 அடி உயர சுழற்கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூ.7 ஆயிரமும் 5 அடி உயர சுழற்கோப்பையும், நான்காம் பரிசாக ரூ.5 ஆயிரம் ரொக்கமும், 4 அடி சுழற்கோப்பையும், ஆறுதல் பரிசாக ரூ.2000 ரொக்கமும், சுழற்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.  இதில் முதல் பரிசை திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை அணியினரும், இரண்டாவது பரிசை மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி அணியினரும், மூன்றாவது பரிசை தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அணியினரும், நான்காவது பரிசை தஞ்சை மாவட்டம் திருவையாறு அணியினரும், ஆறுதல் பரிசை அராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அணியினரும் தட்டிச் சென்றனர்.  நாகப்பட்டினம், காரைக்கால், இராமநாதபுரம், தொண்டி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 35 அணியினர் கலந்து கொண்டனர்.

;