தஞ்சாவூர், மார்ச் 19- தஞ்சாவூர் மாவட்டத் தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது: வேளாண் அடுக்ககம் திட்டமானது வரும் ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் செயல் படுத்தப்பட உள்ளது. வேளாண் அடுக்ககம் உருவாக்குவதன் மூலம் நில விவரங்களு டன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விவ ரம், நில உடமை வாரியாக புவியியல் குறி யீடு செய்தல் மற்றும் நில உடமை வாரி யாக சாகுபடி பயிர் விவரம் ஆகிய அடிப் படை விவரங்களைக் கொண்டு கிரெயின்ஸ் (குரோவர் ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷன் ஆப் அக்ரிகல்சுரல் இன்புட் சிஸ்டம்) என்ற வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிரெயின்ஸ் வலைதளத்தில் விவ சாயிகள் பயனடையும் வகையில் பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, கூட்டுறவுத் துறை, பட்டு வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை இணைக்கப்பட உள்ளது. மேலும், இந்த வலைதளம் மூலம் அர சின் நலத்திட்டங்கள் சரியான பயனாளிக் குச் சென்று அடைவதை உறுதிப்படுத்த முடி யும். ஒற்றைச்சாளர வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் பயன்பெற விவ சாயிகள் விண்ணப்பிக்கும் போது ஆவ ணங்கள் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை. விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்ப டையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம். வேளாண்மை சார்ந்த அனைத்து துறை களும், விவசாயிகளின் அடிப்படை விவ ரங்கள் மற்றும் பயிர் விவரங்கள் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பயன்களை அளிக்க முடியும். திட்ட நிதி பலன்கள் நேரடி பணப்பரி மாற்றம் மூலம் அனுப்பப்படும். இந்த வலை தளத்தில் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல், புகைப்படம் நகல், வங்கி கணக்குப் புத்தக நகல், நிலப்பட்டா, ஆவண நகல், ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் மேற்கொண்ட ஆவணங் களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலு வலர், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலரிடம் உடன டியாக ஒப்படைத்து இந்த கிரெயின்ஸ் வலைதளத்தில் தங்களின் அடிப்படை விவரங்களை பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்து அரசின் நலத்திட்ட உதவி களைப் பெற்று பயன்பெற வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.