districts

திருவையாறு அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதல் 25 பேர் காயம்

தஞ்சாவூர், டிச.26-  திருவையாறு அருகே அரசுப் பேருந் தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் காய மடைந்தனர். தஞ்சாவூரிலிருந்து தூத்துர் செல்லும் அரசு பேருந்து, தஞ்சாவூரிலிருந்து திங்க ளன்று காலை புறப்பட்டு திருவையாறு வழி யாக சென்று கொண்டிருந்தது. பேருந்தை தஞ்சாவூரை அடுத்த குருவாடியை சேர்ந்த  சுந்தர்ராஜ் (52) என்பவர் ஓட்டினார்.  அரசுப் பேருந்து திருவையாறு அடுத்த  வெள்ளச்சிமண்டபம் அருகே செல்லும் போது, திருமானூரிலிருந்து திருவையாறு நோக்கி வந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக நேருக்கு நேராக மோதிக்கொண் டது. இதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் சுந்தர்  ராஜன், பேருந்தில் பயணம் செய்த கண்டி யூரை சேர்ந்த வணங்காமுடி(60), காமரச வல்லியை சேர்ந்து கல்யாணசுந்தரம்(43), ஏலாக்குறிச்சியை சேர்ந்த பரமசிவம்(90), காந்திமதி(50), முருகானந்தம்(42), தேவேந்தரி(50), ஏலாக்குறிச்சியை சேர்ந்த காந்திமணி (40) உள்ளிக்கடையை சேர்ந்த சுந்தர்ராஜ்(60), அந்தணர்குறிச்சியை சேர்ந்த ரேணுகா(40) உள்ளிட்ட 25 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களுக்கு திருவை யாறு அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டது. இதில் முருகானந்தம், சுந்தர்ராஜன், காந்திமதி உள்பட 10 பேர்  மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்து வக்கல்லூரி மருத்துவமனயில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திரு வையாறு காவல் துணை கண்காணிப்பா ளர் ராஜ்மோகன் உள்ளிட்ட காவல்துறை யினர் விரைந்து வந்து விபத்துக்குள்ளான பேருந்துகளை அப்புறப்படுத்தினர்.