தஞ்சாவூர், ஜூன் 9 - தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத் தில் இருந்து டி.என்.68.என்.0427 என்ற நகரப் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பாபநாசம் நோக்கிச் சென்றது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கரந்தை பகுதியில் பேருந்து சென்று கொண்டி ருந்த போது, அதன் அச்சு முறிந்து பேருந்து நகர முடியாமல் நடுவழியில் நின்றது.
இதனால், பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். மேலும் காலை நேரம் என்பதால், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பயணிகள் மிகுந்த அவதிக் குள்ளாகினர். சிலர் மாற்றுப் பேருந்தில் ஏறிச் சென்றனர்.
இதேபோல, டி.என்.68.என் 522 என்ற நகரப் பேருந்து ரயில்வே நிலையத்தில் இருந்து, பழைய பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு காந்திஜி சாலை வழியாக சென்ற போது, திடீரென பேருந்தின் அச்சு முறிந்து செயல்பாடின்றி நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
இதன் பிறகு மெக்கானிக்கை வரவ ழைத்து, சரி செய்யப்பட்டு நகரப் பேருந்துகள் கொண்டு செல்லப்பட்டன. தஞ்சாவூரில் இயங்கும் அரசு நகரப் பேருந்துகள் எல்லாம் பழுதடைந்த வண்டியாகத் தான் உள்ளன. அரசுப் போக்குவரத்து துறை இதில் தனிக் கவனம் செலுத்தி, பழுதடைந்த வண்டிகளை மாற்றி, பெரியளவில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.