தஞ்சாவூர், ஜூன் 9- பொது இன்சூரன்ஸ் ஊழி யர்கள் சார்பில், தஞ்சை யுனைடெட் இந்தியா இன் சூரன்ஸ் கோட்ட அலுவலகம் முன்பு ஒரு மணி நேர வெளி நடப்பு வேலை நிறுத்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. நீண்ட காலமாக நிலுவை யில் உள்ள ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடி யாக துவங்கக் கோரியும், பொதுத்துறை பொது இன் சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு மேற் கொள்ளும் முயற்சிகளை கைவிடக் கோரியும், புதிய பென்சன் திட்டத்தை கைவிடக் கோரியும், குடும்ப ஓய்வூதியத்தை 15 லிருந்து 30 விழுக்காடாக உயர்த்தக் கோரியும் புதனன்று பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனையொட்டி தஞ்சை யுனைடெட் இந்தியா இன் சூரன்ஸ் கோட்ட அலுவலகம் முன்பு யுனை டெட் இந்தியா, நியூ இந்தியா, நேஷனல் மற்றும் ஓரி யண்டல் இன்சூரன்ஸ் நிறு வனங்களை சேர்ந்த அதிகாரி கள், வளர்ச்சி அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி யதாரர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, யுனைடெட் இந்தியா முதல் நிலை கோட்ட மேலாளர் ப. ஸ்டாலின் தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தை மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தஞ்சை மாவட்டச் செயலா ளர் த.பிரபு துவக்கி வைத்தார். தஞ்சை கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத் தலைவர் செல்வராஜ், மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மண்டல இணை செயலர் பி.சத்தியநாதன், நியூ இந்தியா அதிகாரிகள் சங்க பிரசன்னா, ஓரியண்டல் இன்சூரன்ஸ் அதிகாரிகள் சங்க பூர்ணிமா, ஓய்வூதிய தாரர் சங்க ஜெயக்குமார் ஆகியோர் பேசினர்.