districts

img

கேஸ் விலை உயர்வு: மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், மார்ச் 6-  ஒன்றிய மோடி அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியதை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க குடந்தை மாநகர குழு சார்பில் தாராசுரம் பேருந்து நிலை யத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரத் தலைவர் ஏ.எஸ்.சுமதி தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் கே.எஸ்.சுமதி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.