தஞ்சாவூர், டிச.9 - தஞ்சை மாநகராட்சி பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் நலனுக் கான அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாநகரக் குழு சார்பில், தஞ்சை மாநக ராட்சி அலுவலகம் முன்பு திங்கட்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இதில், சிபிஎம் மாநகரச் செயலா ளர் எம்.வடிவேலன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், என்.சரவணன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் என்.குருசாமி, இ.வசந்தி மற்றும் மாநகரக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை பொலிவுறு நகரத் திட்டம் குறித்து மாநகராட்சி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஆக்கி ரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட மாநக ராட்சி இடங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. வீடு இல்லாத மக்க ளுக்கு மாநகராட்சி பொறுப்பிலேயே வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக வீடு கட்டித் தர வேண்டும். பொது மக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் திரியும் மாடுகள், குதிரை கள், தெருநாய்களை பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை பூங்காவின் பழமை மாறாமல் அதனை மாநகராட்சி நிர்வா கமே நடத்த வேண்டும். சாலைகளில் கழிவுநீர் வெளியேறுவதை சரிசெய்ய வேண்டும். குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க வேண்டும். மருத்து வக் கல்லூரி சாலையில் மழைநீர் தேங்குவதை அகற்ற வேண்டும். பழைய பேருந்து நிலையத்தில் மின் விளக்கு, குடிநீர், கழிப்பறை வசதியை மேம்படுத்த வேண்டும். தெருக்களில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு சட்டக் கூலியை வழங்க வேண்டும்.
பழுதடைந்த மாநகராட்சி பகுதி சாலைகளை போர்க்கால அடிப்படை யில் சீரமைக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாமந்தங்குளம், அய்யன்குளத்தில் மண்டிக் கிடக்கும் செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மாநகராட்சி அலுவ லர்களிடம் மனு அளிக்கப்பட்டது.