districts

img

சாதிச்சான்றிதழ் இல்லாதவர்களுக்கு நேரில் சென்று வழங்கிய ஆட்சியர் தீக்கதிர் செய்தியால் விடிவு பிறந்தது

தஞ்சாவூர், ஜூன் 30-  தஞ்சை மாவட்டம் பேரா வூரணி அருகே உள்ள துறவிக்காடு எம்ஜிஆர் நகர் பகுதியில், பாசன வாய்க்கால் ஓரத்தில் புறம்போக்கு இடத்தில், பூம்பூம் மாட்டுக்காரர் கள் இன மக்கள் குடிசை அமைத்து 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதே போல் ஒட்டங்காட்டில் சாலை ஓரத்தில் 30க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர்.  இவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி குடியிருந்து வருகின்றனர். மேலும் இவர்க ளுக்கு இதுவரை சாதிச் சான்றி தழ் இல்லாத காரணத்தால், பள்ளி யில் 8 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு, மேற்படிப்பு செல்ல முடியா மல், ஆண்கள் சிறுவயதிலேயே வேலைக்கு செல்கின்றனர்.  இதுகுறித்து, ஜூன் 6 ஆம் தேதி தீக்கதிர் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதைய டுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர், இந்தப் பகுதி மக்களின் கோரிக்கை குறித்து விசாரித்து உரிய நடவ டிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  இதையடுத்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபா கரன் நேரில் சென்று விசாரணை செய்து, அவர்களுக்கு உரிய சாதிச் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.  இந்நிலையில், புதனன்று துற விக்காடு மற்றும் ஒட்டங்காடு பகு திக்கு நேரடியாகச் சென்ற தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், துறவிக் காட்டைச் சேர்ந்த 13 குடும்பங்க ளைச் சேர்ந்த 65 பேருக்கும், ஒட்டங் காட்டைச் சேர்ந்த, 15 குடும்பங்க ளைச் சேர்ந்த 57 பேருக்கும் இந்து ஆதியன் வகுப்பினர் என்ற சாதிச் சான்றிதழை வழங்கினார்.  இதனால், நெகிழ்ச்சியடைந்த இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வில் ஒளியேற்றிய மாவட்ட ஆட்சிய ருக்கும், எங்கள் நிலை குறித்து  செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளித ழுக்கும் நன்றி தெரிவிக்கிறோம் என கண்ணீருடன் தெரிவித்தனர்.  அப்போது அவர்களிடம் பேசிய தஞ்சை மாவட்ட ஆட்சியர், ‘‘இனி சிறு வயதில் பிள்ளைகளை திரு மணம் செய்து கொடுக்கக் கூடாது. ஆண் குழந்தைகள், பெண் குழந் தைகள் அனைவரையும் நன்றாக படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்’’ என கூறினார்.  பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், பட்டுக் கோட்டை வட்டாட்சியர் ராமச்சந்தி ரன், வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவடிவேல், ஊராட்சி மன்றத் தலைவர் கற்புக்கரசி எழுவராஜன் மற்றும் அலுவலர்கள் உடனி ருந்தனர்.