districts

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை

தஞ்சாவூர், மே 25 -  தஞ்சாவூரில் உள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல் நிலைப் பள்ளியில், 2022 - 23 ஆம் கல்வியாண் டிற்கு, 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு  வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.  இப்பள்ளியில், அரசால் வழங்கப்படும் கல்வி உபகரணங்கள், சீருடை, காலணி, பிரெய்லி புத்தகங்கள் மற்றும் கணித உபகர ணங்கள் மாணவ, மாணவிகளுக்கு இலவச மாக பெற்றுத் தரப்படுகிறது. நடைப்பயிற்சி, விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டி கள், நடனம், கராத்தே, யோகா, சிலம்பம்,  இசை போன்ற இதரக் கலைகளும் கற்பிக்கப் படுகின்றன. மேலும், மாணவர்களுக்கு மாதந் தோறும் மருத்துவப் பரிசோதனை செய்யப் படுகிறது. இப்பள்ளியின் விடுதியில் மாண வர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு இடமும், ஆரோக்கியமான உணவு மற்றும்  தூய்மையான குடிநீர் போன்றவை வழங்கப் பட்டு வருகிறது.  மாணவர் சேர்க்கைக்கு அணுக வேண்டிய  முகவரி:  பார்வைத்திறன் குறையுடையோருக் கான அரசு மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம், தஞ்சாவூர். அலுவலக தொலைபேசி எண்:  04362- 272222 மற்றும் தலைமை ஆசிரியரின் கைபேசி எண்: 9629495808, 8903263066 ஆகும்.  எனவே மாவட்டத்திலுள்ள பார்வைத் திறன் குறையுடைய மாணவ, மாணவிகளை  தஞ்சாவூர் பார்வைத்திறன் குறையுடை யோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக் கொண் டுள்ளார்.