districts

img

நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் மாதர் சங்கம் வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜூன் 8-  தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்  16 ஆவது ஒன்றிய மாநாடு நடைபெற்றது.  ஒன்றியத் தலைவர் என்.வெற்றிச்செல்வி தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செய லாளர் வி.ஷைலஜா வரவேற்றார். மாவட்டப்  பொருளாளர் இ.வசந்தி மாநாட்டை துவக்கி  வைத்துப் பேசினார். மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி நிறைவுரை யாற்றினார்.  மாநாட்டில் ஒன்றியத் தலைவ ராக என்.வெற்றிச்செல்வி, செயலாளராக ஜெ. மெர்ஸி, பொருளாளராக ஜோஸ்பின் மேரி உள்ளிட்ட 13 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது.  மாநாட்டில், “பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை களை தடுத்து நிறுத்த வேண்டும். பெட் ரோல், டீசல், சமையல் எரிவாயு, அத்தியா வசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப் படுத்த வேண்டும். நியாய விலைக் கடைகளில்  அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். தரமான அரிசி, மண்ணெண்ணெய் அளவை கூடுத லாக வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத்  திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து,  குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்.  மெலட்டூர், அம்மாபேட்டை பேரூராட்சி களுக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  முன்னதாக கொடியேற்றி வைக்கப் பட்டது. பெண்கள் பங்கேற்ற சிலம்பாட்டம், கோலாட்டம் நடைபெற்றது.