districts

தமிழகத்தில் முதல் முறையாக ராசா மிராசுதார் மருத்துவமனையில் பாத சிகிச்சை மையம் தொடக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் தகவல்

தஞ்சாவூர், ஜன.3-  தமிழகத்தில் முதல் முறையாக தஞ்சா வூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை யில் பாத சிகிச்சை மையம் தொடங்கப்பட்  டுள்ளது என மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனையிலும், அரசு ராசா மிராசுதார் மருத்  துவமனையிலும் 2021 ஆம் ஆண்டில் புற நோயாளியாகச் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 9.72 லட்சமாக இருந்த நிலை யில், 2022 ஆம் ஆண்டில் 12.71 லட்சமாக அதி கரித்தது. அதாவது, 2.98 லட்சம் பேர் அதிக மாக வந்துள்ளனர். இதேபோல, உள் நோயாளியாக 2021 ஆம் ஆண்டில் 1.48 லட்சம் பேர் சேர்க்கப்பட்ட நிலையில், 2022  ஆம் ஆண்டில் 1.50 லட்சமாக அதிகரித் துள்ளது. அறுவை சிகிச்சையைப் பொறுத்த வரை, 2021 ஆம் ஆண்டில் 18,045 பேருக்கு செய்யப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்  டில் 31,100 ஆக அதிகரித்துள்ளது. மகப்  பேறு சிகிச்சையில் 2021 ஆம் ஆண்டில் 13,199 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டில் 13,271 ஆக அதி கரித்துள்ளது. இதில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு, 2021 ஆம் ஆண்டில் 6,177 பேர் என இருந்த நிலையில், 2022 ஆம்  ஆண்டில் 6,583 ஆக உயர்ந்துள்ளது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் இறந்தவர்கள் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 6,641 என இருந்த நிலை யில், 2022 ஆம் ஆண்டில் 4,813 பேர் என குறைந்துள்ளது.

அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் 782 என இருந்த நிலை யில், 731 ஆக குறைந்துள்ளது. இதய சிகிச்சைப் பிரிவில் ஆஞ்சியோ கிராம் 2021 ஆம் ஆண்டில் 517 பேருக்கு செய்யப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்  டில் 1,877 பேருக்கும், ஆஞ்சியோ பிளாஸ்டி,  ஸ்டென்ட் பொருத்துதல், 2021 ஆம் ஆண் டில் 166 பேருக்கும், 2022 ஆம் ஆண்டில் 1,081 பேருக்கும், ரத்த நாள அறுவை சிகிச்சை 2021 ஆம் ஆண்டில் 181 பேருக்கும், 2022 ஆம் ஆண்டில் 233 பேருக்கும் மேற் கொள்ளப்பட்டுள்ளது. நாற்பது வயது கடந்த பெண்கள் மார் பகப் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதற்காக அரசு ராசா  மிராசுதார் மருத்துவமனையில் மேமோ கிராம் வசதி செய்யப்பட்டுள்ளது. உறுப்பு  மாற்று அறுவை சிகிச்சையை வருங்காலத் தில் மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் முதல் முறையாக பாத சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதை இன்னும் மேம்படுத்தும் விதமாக  வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்பில் 150 இருக்  கைகள் உள்ள நிலையில், அதை 250 ஆக  உயர்த்துவதற்கான ஆயத்தப் பணி நடை பெறுகிறது. இது தொடர்பாக தேசிய மருத்து வக் குழு விரைவில் ஆய்வு செய்ய வுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் நாள் தோறும் 5,000 நெகிழிப் பைகள், பொருட்  கள் குப்பைகளாகச் சேர்ந்து வந்ததால், அதை அப்புறப்படுத்துவதற்கு பெரும் சிர மம் ஏற்பட்டது. இதனால், வளாகத்தில் நெகி ழிப் பொருள் பயன்பாட்டுக்கு டிசம்பர் 5 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனையிலும், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையிலும் லஞ்சத்தைத் தடுக்க ஊழல் கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது. நாள்தோறும் ஆய்வு செய்வ தன் மூலம் லஞ்ச புகார் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது, மருத்துவக் கண்கா ணிப்பாளர் எஸ்.மருதுதுரை, மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் என்.ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.