தஞ்சாவூர், பிப்.16 - தஞ்சாவூர் மாநகராட்சி கல்லுக் குளம் பகுதியில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிடும் 35 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் என்.வைஜெயந்திமாலா, 36 ஆவது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் இ.வசந்தி ஆகியோர் அறிமுகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடை பெற்றது. கூட்டத்திற்கு, சிறுபான்மை மக்கள் நலக்குழு பொருளாளர் எஸ்.ஞான மாணிக்கம் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் கருணாநிதி வர வேற்றார். சிபிஎம் வேட்பாளர்களுக்கு வாக்கு கள் கேட்டு மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் உரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் கோ.நீலமேகம், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.மனோகரன், பி.செந்தில் குமார், என். வி.கண்ணன், எஸ்.தமிழ்செல்வி, என்.சுரேஷ்குமார், ஆர். கலைச்செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சாமி.நடராஜன், என். குருசாமி, என்.சரவணன், மாநகரச் செயலாளர் வடிவேலன் மற்றும் நகரக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிளைச் செயலா ளர் லூகாஸ் நன்றி கூறினார்.