districts

img

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு களப்பயிற்சி

பட்டுக்கோட்டை, டிச.18 -  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத் தில், இளம் அறிவியல் வேளாண்மை இறுதி ஆண்டு  படிக்கும் மாணவிகள் தங்கள்  வேளாண் களப்பயிற்சியை தொடங்கினர்.  பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்கு நர் மாலதி, வேளாண்  அலுவலர் அப்சரா ஆகி யோர் வழிகாட்டுதலின்படி அனுசரனை ஆராய்ச்சி ஆராய்ச்சி திடலுக்காக, அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த வேதநாயகம் என்ற விவசாயி வயலில் நாற்று  நடுதல் பணியில் ஈடுபட்ட னர்.  தொடர்ந்து, வெண்டாங் கோட்டையில் விவசாய வயல்வெளிப் பள்ளியில் கலந்து கொண்டு தென்னை யைத் தாக்கும் மூன்று முக்கிய பூச்சிகளான காண் டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு, ரூகோஸ் சுருள்  வெள்ளை ஈ மற்றும் தஞ்சை  வாடல் நோய் ஆகிய வற்றின் அறிகுறிகள் மற்றும்  மேலாண்மை முறைகள் குறித்து தெரிந்து கொண்ட னர். தொடர்ந்து, நாட்டுச்சாலை விவசாயி சுப்பிரமணியம், சூரிய மூர்த்தி, இயற்கை விவசாயி ராமநாதன் ஆகியோரை சந்தித்து, கலந்துரையாடி விவசாய முறையிலான பண்ணை சாகுபடி குறித்து கேட்டறிந்தனர்.  மேலும், பட்டுக் கோட்டையில் உள்ள உழவர் சந்தையை பார்வையிட்டு அங்குள்ள கூட்டம், சிறப்பு  அங்காடி, மகளிர் சுய  உதவிக் குழு, உழவர் உற்பத்தியாளர் நிறுவ னங்களை அணுகி தகவல் சேகரித்தனர். தொடர்ந்து இப்பகுதியில் தங்கி வேளாண் மாணவிகள் களப் பயிற்சி பெற்று வருகின்ற னர்.