districts

img

பணி நெருக்கடியால் உயிரிழப்பு: நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஏப்.3-  மதுரை உதவி செயற் பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) அலுவல கத்தில் உதவியாளராக பணி புரிந்து வந்த சண்முகவேல் என்பவர் மூன்று, நான்கு தினங்களாக தொடர்ந்து இரவு, பகல் பாராமல் பணி செய்ததால் மாரடைப்பால் அலுவலகத்திலேயே கால மானார்.  இதற்கு, முழு பொறுப்பு தமிழ்நாடு அரசும், வேளா ண்மை துறையுமே காரணம். எனவே, அவரது குடும்பத் திற்கு நிவாரணமாக, ரூ.1  கோடி மற்றும் கருணை அடிப்படையில் குடும்பத் தில் ஒருவருக்கு பணி நிய மனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சாவூரில் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுப் பணி யாளர்கள் சங்கத்தின் சார்  பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ஜி.சிவ லிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் மாநிலத் தலை வர் ஆர்.பன்னீர்செல்வம், மாவட்டச் செயற்குழு உறுப்  பினர் எம்.சுரேஷ், அரசு ஊழி யர் சங்க மாநிலச் செயலா ளர் எஸ்.கோதண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.