districts

img

புறவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நூதனப் போராட்டம்

தஞ்சாவூர், மார்ச் 21-  தஞ்சாவூர் மாவட்டம் திருவை யாறு அருகே கண்டியூரில் விளை நிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரி வித்து விவசாயிகள் செவ்வாய்க் கிழமை யாகம் நடத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவையாறு அருகே கண்டியூ ரில் விளைநிலங்களை அழித்து நெற்பயிர்கள் மீது செம்மண்ணை கொட்டி புறவழிச்சாலை அமைப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி கள் தொடர் உண்ணாவிரதப் போரா ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்தப் போராட்டம் தொடர்ந்து 102 ஆவது நாளாக செவ்வாய்க்கிழ மையும் நடைபெற்றது. அப்போது, விவசாயிகள் யாகம் நடத்தி நூதன மான முறையில் போராட்டம் நடத்தி  தங்களது எதிர்ப்பைத் தெரிவித்த னர்.