தஞ்சாவூர், மார்ச் 23 - தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022 மார்ச் மாதம் விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச் 25 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் தலைமையில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவ சாயிகளுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும், கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளா ண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக் களை தெரிவிக்கலாம். விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினி யில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின் மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.