தஞ்சாவூர், மே 24- போதைப் பொருட்கள் விற்பனை, நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்க மாநகர் மாநாட்டில் வலி யுறுத்தப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தஞ்சை மாநகர 16 ஆவது மாநாடு கணபதி நகர் அலுவலகத்தில், ஆர்.வின்சிலா ராணி தலைமையில் நடைபெற்றது. ஜி.பைந்தமிழ் வரவேற் றார். மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி துவக்க உரை யாற்றினார். மாநகரச் செயலாளர் இ.வசந்தி வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார். மாவட்டச் செயலா ளர் எஸ்.தமிழ்செல்வி நிறைவுரையாற்றி னார். இம்மாநாட்டில் மாநகரத் தலைவ ராக புனிதா, மாநகரச் செயலாளராக இ.வசந்தி, பொருளாளராக ஜி.பைந் தமிழ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். தஞ்சை பழைய பேருந்து நிலையம், மாட்டு மேஸ்திரி சந்தில் உள்ள டாஸ்மாக் கடை, மெடிக்கல் காலேஜ் சாலை, பாலாஜி நகர் டாஸ்மாக் கடை பெண்களுக்கும், மாணவிகளுக்கும், பொது மக்களுக்கும் மிகுந்த இடை யூறாகவும், பல சமூகச் சீரழிவுகளுக்கு காரணமாகவும் உள்ளதால் உடனடி யாக அப்புறப்படுத்த வேண்டும். “தஞ்சை மாநகரத்தில் போதைப் பொருட்கள் அதிகமாக விற்கப்படு கிறது. இதனை காவல்துறை கண்டு கொள்ளாத போக்கு உள்ளது. ஆகை யால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப் படுவதுடன், பெண்கள் மீதான வன்முறை களும், குடும்ப வன்முறைகளும் அதிகள வில் நிகழ்கின்றன.
இந்த போதை கலாச் சாரம் மிகவும் கவலை அளிக்கிறது. ஆகையால் அரசு தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் நடை பெறும் வேலைகள் அரைகுறையாக நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் வேலைகளை விரைந்து முடிக்க வேண்டும். தஞ்சை மாநகரத் தில் அனைத்து தெருக்களிலும் நடை பெற்று வரும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சுய உதவிக்குழு பெண்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பு பயிற்சிகள் அளித்து தொழில் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும். அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதால் அவமானப்படுத்தப் படுகிறார்கள். அரசு உரிய முறையில் கண்காணித்து பெண்கள் கண்ணிய மாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சமையல் எரிவாயு, பெட் ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப் படுத்த வேண்டும். வாடகை வீடுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் ஏழை, எளியோருக்கு இலவச குடி மனைப் பட்டா வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.