districts

img

ஏழைகளை பாதிக்கும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக! சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்/கரூர், செப்.21 - தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், மின் கட்டண உயர்வால் சாதாரண பொதுமக்கள், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் பாதிக்கப்படுவதால், கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பட்டுக்கோட்டை ஒன்றியக் குழு சார்பில் தபால் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், எம்.செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.  கரூர் கட்சியின் கரூர் ஒன்றிய குழு சார்பில் வேலாயுதம்பாளையம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.பூரணம் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், ராஜாமுகமது, மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், ஆர்.ஹோச்சுமின் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;