தஞ்சாவூர், மார்ச் 6- தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் சனிக் கிழமை மாலை,தமிழ்நாடு, திராவிட மொழி கலை இலக்கியப் பண்பாட்டு பேரவை சார்பில், ‘‘கல்வி அரசியல்’’ சிறப்பு கருத்த ரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு பேரவையின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் மு.கண்ணையன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் பேராசிரி யர் முனைவர் ரெ.சதாசிவம் வரவேற்றார். பேரவையின் தலைவர் பொறியாளர் இரா.கண்ணதாசன், ஆதித்தமிழர் பாது காப்பு பேரவை தலைவர் பொன். ரெங்க சாமி, ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம் முன்னாள் பொருளாளர் கா.சைவராசு, தமிழ் பல்கலைக்கழக எஸ்.சி., எஸ்.டி., ஆசிரியர் மற்றும் பணியாளர் மேம்பாட்டு சங்கம் நிறுவனர் இரா.கஜேந்தி ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணை யம் உறுப்பினர் கோ.ரகுபதி, ‘கல்வி உள் அரசியல்’ என்ற தலைப்பில் கருத்துரை யாற்றினார். தமிழ்நாடு அரசு சமூகநீதி கண்கா ணிப்புக் குழு உறுப்பினர் ஏ.ஜெய்சன், ‘சமூக நீதி பார்வையில் இட ஒதுக்கீடு’ என்ற தலைப்பிலும், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, ‘கல்வி அரசியல்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர். நிறைவாக பொருளாளர் நா.சுரேஷ்பாபு நன்றி கூறினார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் என்.சரவணன், இந்திய மாணவர் சங்கம் அர்ஜூன், கரி காலன், வடிவேலன் மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.