districts

img

சரியான புரிதல்கள் இல்லாததால் வரி செலுத்துவோருக்கு கூடுதல் சுமை வருமானவரி இணை ஆணையர் தகவல்!

தஞ்சாவூர், டிச.10-  தஞ்சாவூர் சரகம் வள மான பகுதியாக இருந்தா லும், இச்சரகத்தில் நிகர வரி  வசூல் 51 விழுக்காடு குறை வாக உள்ளது என வருமான வரித்துறையின் தஞ்சாவூர் சரக இணை ஆணையர் ஆர். ராஜராஜேஸ்வரி தெரி வித்தார்.  

தஞ்சாவூரில் வருமான வரித் துறை சார்பில், திங்கள்கிழமை மாலை நடைபெற்ற வருமான வரி  குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:  வரி செலுத்துவோரின் நிறைய தகவல்களைச் சேக ரித்து, வலைதளத்தில் பதி வேற்றம் செய்யப்படுகிறது.

ஆனால், அந்தத் தகவல்க ளை வரி செலுத்துவோர் பலர் பார்ப்பதில்லை. நோட் டீஸ் அனுப்பினாலும், பதில் அளிப்பதில்லை. எனவே, வரி செலுத்துவோருக்கு இ -  பைலிங் போர்ட்டலை தொ டர்ந்து பார்க்க வேண்டும் என்றும், வருமான வரித் துறையிலிருந்து வரக்கூடிய நோட்டீஸ்களுக்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் வரி ஆலோசகர்கள் ஆலோ சனை அளிக்க வேண்டும். தற்போது, அலுவலர்கள் - வரி செலுத்துவோர் நேரு க்கு நேர் பார்த்துக் கொள்ள முடியாத நிலை உள்ளதால், நோட்டீசுக்கு சரியான பதிலை எழுதி, முகம் தெரி யாத ஒருவரை புரிய வைக்க வேண்டும்.

பல நிகழ்வுக ளில் சரியான புரிதல்கள் இல்லாததால், வரி செலுத்து வோருக்குக் கூடுதல் சுமை ஏற்படுகிறது. முன் வரி (அட்வான்ஸ் டாக்ஸ்) இறுதி தேதி டிசம் பர் 15 ஆம் தேதியுடன் முடி வடைவதால், அனைவரும் வரி பொறுப்புகளைக் கணக் கிட்டு, அதில் 75 விழுக் காட்டை செலுத்த வேண்டும். எந்த பிரச்னையாக இருந்தா லும், உதவி தேவைப்பட்டா லும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். தஞ்சாவூர் வளமான பகுதியாக இருப்பதால், அது வரி செலுத்துவதிலும் இருக்க வேண்டும்.

ஆனால், அந்த அளவுக்கு வரி செலுத் தும் விகிதம் திருப்திகரமாக இல்லை. தஞ்சாவூர் சரகத் தின் வருமான வரி வசூல் இலக்கு ரூ. 571 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. இதில், நவம்பர் 30 ஆம் தேதி வரை ரூ.481 கோடி வசூல் செய்யப் பட்டது. இதில், 671 பேர் செலுத்திய தொகையைத் திரும்பப் பெற்றுள்ளனர். நிகர வரி வசூல் 51 விழுக் காடு குறைவாக உள்ளது. எனவே, யாருக்கெல்லாம் முன் வரி நிலுவையில் இருக் கிறதோ, அவர்கள் செலுத்த முன் வர வேண்டும். இவ் வாறு இணை ஆணையர் தெரிவித்தார்,  

இந்நிகழ்ச்சியில், தஞ்சா வூர் வட்ட வருமான வரி உதவி ஆணையர் எஸ்.சீனி வாசன், வருமான வரி அலு வலர்கள் ஜி.சாய்குமார், ஆர். வில்விஜயன், வரி ஆலோசகர்கள் கூட்டமை ப்பு தலைவர் ஆர். ரவிச்சந்தி ரன், செயலர் எஸ். தியாகரா ஜன், தமிழ்நாடு, புதுச்சேரி பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் தஞ்சாவூர் மண்டல ஒருங்கிணைப்பா ளர் சி.ஏ.குகன், தணிக்கை யாளர்கள் தமிழய்யா, பழனி சாமி, புருஷோத்தமன், மகா தேவன், கணேசன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.