districts

விளைநிலங்களை அழித்து புறவழிச்சாலை வேண்டாம் 3-வது முறையாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

தஞ்சாவூர், நவ.1 - நவ.1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்க ளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கீழத் திருப்பந்துருத்தி கிராமத்தில், செவ்வாய்க்கிழமை ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி ரமேஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.  கிராம மக்கள், விவசாயிகள் சிலர் புற வழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து கருப்பு பேட்ச் அணிந்தும், சங்கு ஊதிய படியும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், பெரம்பலுார் – மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில், அரசூர், காட்டுக்கோட்டை, கீழத் திருப்பந்துருத்தி, நடுப்படுகை, தில்லைஸ்தானம், திருவையாறு, அந்தணர் குறிச்சி வழியாக விளாங்குடி சாலை இணைப்பு திட்டமாக சுமார் 8 கி.மீட்டர் வரையில், நிலங்களை கையகப்படுத்தி புறவழிச்சாலை அமைக்கப்படும் என கடந்த ஆண்டு ஒன்றிய அரசு, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.  இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தினர். மேலும், கடிதங்கள் மூலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். புறவழிச்சாலை அமைக்கப் பட்டால், உளுந்து, தென்னை, வாழை உள்ளிட்ட விளைநிலங்கள் பாதிக்கப்படும்.  எனவே கண்டியூர், நடுக்கடை, திருவை யாறு ஆகிய பகுதிகளின் சாலைகளில் உள்ள  ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றினால், போக்குவரத்து பாதிக்காது. விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தினால், வாழ்வா தாரம் கேள்விக் குறியாகும் என மூன்றாவது முறையாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.  முழுநேர ரேசன் கடையாக மாற்றம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் முதன் முறை யாக கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

8-வது வார்டு ஜூப்ளி சாலையில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தெற்கு பள்ளியில் நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில், குடிநீர், சாலை,  மின் விளக்கு வசதிகள் கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடி யிருப்பு கிராமம் 12-வது வார்டில் முத்துமாரி யம்மன் கோயிலில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு வார்டு கவுன்சிலர் அம்பிகாபதி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில், எம்ஜிஆர் நகரில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். அப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில் மாற்று இடம் வழங்க வேண்டும். அப்பகுதி யில் இயங்கி வரும் பகுதிநேர ரேசன் கடையை முழுநேர ரேசன் கடையாக மாற்ற வேண்டும்  என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜெயங்  கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொண்டு உடனடியாக முழுநேர ரேசன் கடையாக செயல்பட நடவடிக்கை மேற்கொண்டார்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம், காளி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் முன்னிலையில், சிறப்பு பார்வையாளராக மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கலந்து கொண்டார்.