districts

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை

தஞ்சாவூர், அக்.13- தஞ்சாவூர், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 2022 ஆம் ஆண்டு சேர்க்கைக்கு இரண்டு கட்டங்க ளாக கலந்தாய்வு முடிந்துள்ளது. இதில் மகளிர் பிரிவுகளான இயந்திர மின்னணுவியல் (Mechanic Mechatronics) மற்றும் கணினி இயக்குபவர் மற்றும்  திட்டமிடுதல் உதவியாளர் (COPA) ஆகிய தொழிற் பிரிவுகளில் காலியிடங்கள் அதிகமாக உள்ளன.  பொது பிரிவான தொழிற்சாலை வர்ணம் பூசு பவர் தொழிற்பிரிவில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன. எனவே இதில் சேர விருப்பம் உள்ள 10 ஆம்  வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற  மாணவர்கள் நேரடியாக வந்து சேர்ந்து கொள்ளலாம்.  மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டணச் சலுகை, விலையில்லா மிதிவண்டி, சீருடைகள், காலணி, வரைபடக்கருவி, நோட்டுப் புத்தகம் போன்றவை வழங்கப்படும்.  தவிர அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மாதம் ரூ.750/ உதவித்தொகை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உதவித்திட்டத்தின்கீழ் தகுதியுள்ள பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000/- உத வித்தொகை வழங்கப்படும்.  பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு, உள்நாடு  மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர  உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் விவரங்களுக்கு 7708709988, 94427 05428, 9442521649, 9943130145 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  தெரிவித்துள்ளார்.

;