தஞ்சாவூர், அக்.23 - சவுதி அரேபியா நாட்டில் மர்ம மான முறையில் இறந்த மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். மகனின் உயிரிழப்பு குறித்து உரிய விசாரணையை அந்நாட்டின் இந்திய தூதரகம் நடத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக் கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே குலமங்கலத்தைச் சேர்ந்த வர் தோ.வேலாயுதம் (70). இவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த அக்.10 ஆம் தேதி மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில், ‘எனது இளைய மகன் ஜெயராஜ் (32). அவ ருக்கு திருமணமாகி கண்ணகி என்ற மனைவியும், ஜெயஸ்ரீ (4) என்ற மகளும் உள்ளனர். ஜெயராஜ் கடந்த 2018 ஆம் ஆண்டு சவுதி அரே பியா நாட்டில் உள்ள தம்மாம் பகுதி யில் கட்டடப் பணிக்காக சென்றார். இந்நிலையில் கடந்த அக். 9 ஆம் தேதி, எனது மருமகள் கண்ண கிக்கு, சவுதிஅரேபியா நாட்டின் தூத ரகத்தின் அதிகாரிகள் போன் செய்து, ஜெயராஜ் இறந்து விட்டதா கவும், குளியலறையில் தூக்கிட்டு இறந்தது போன்று ஒரு புகைப் படத்தையும் அனுப்பியுள்ளனர். அதன்பிறகு அங்கிருந்து எந்தவித தகவலும் இல்லை. எனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளது. இது தொடர் பாக சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி எனது மகனின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை வேண்டும். மேலும், சவுதி அரேபியாவில் உள்ள எனது மகனின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. தற்போது மனு கொடுத்து 12 நாட்களாகியும், மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜெயராஜின் குடும்பத்தினர் வேதனை தெரி விக்கின்றனர்.