districts

img

சொந்த ஊரிலேயே மனைப்பட்டா வழங்கக் கோரி தொழிலாளி மறியல்

தஞ்சாவூர், டிச.14- தஞ்சையை அடுத்த  சூரக்கோட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கூலித்  தொழிலாளி மதியழகன் (47).  இவருடைய மனைவி சந்திரா.  இவர்களுக்கு 4 பெண் குழந்தை கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இவ ருக்கு சொந்தமாக வீடு, வீட்டுமனை என எதுவும் கிடையாது. வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.  இந்த நிலையில், மதியழகன், அந்த ஊரிலேயே தனக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என கேட்டு கடந்த 2018-ஆம்  ஆண்டு முதல் ஆட்சியர் அலுவல கத்தில் விண்ணப்பித்து வந்துள் ளார். ஆனால், இதுவரை அவருக்கு மனைப்பட்டா வழங்கப்பட வில்லை.  இந்நிலையில், தற்போதைய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவரிடம், மதியழகன் மனு அளித்தார். அதனை பரிசீலித்த ஆட்சியர், அவருக்கு இலவச வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுப்ப தாக தெரிவித்தார். இதையடுத்து மதியழகனுக்கு திங்களன்று செங்கிப்பட்டி அருகே வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.  பட்டாவை பெற்றுக்கொண்ட மதியழகன் தனக்கு சொந்த ஊரி லேயே பட்டா வழங்க வேண்டும் எனக் கூறி தஞ்சை பழைய ஆட்சி யர் அலுவலகம் அருகே செவ்வா யன்று தனது மனைவி, குழந்தை களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல்அறிந்த தஞ்சை மேற்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சாலை  மறியலில் ஈடுபட்ட மதியழகனுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆட்சியரி டம் பேசி உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவித்தனர்.