தஞ்சாவூர், ஜன.31- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து மாநில உரிமை களுக்கு எதிராக, சட்ட வரம்புகளை மீறி செயல்படுவதை கண்டித்தும், தீக்கி ரையான வீரவெண்மணி தியாகிகளின் நினைவகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதை கண்டித்தும், தஞ்சாவூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழவாசல் மார்க்கெட் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநில செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார்.
சிஐடியு மாவட்ட பொருளாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணைச் செயலா ளர் கே.அன்பு, கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் இ.டி.எஸ்.மூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் கே.பாலமுருகன், டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளர் கே.வீரையன், தரைக்கடை சங்க மாவட்டச் செய லாளர் மில்லர் பிரபு, ஆட்டோ சங்க மாநகர செயலாளர் ஏ.ராஜா, மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கச் செயலாளர் ரவிக்குமார், மாட்டு வண்டி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செங்கிப்பட்டியில் சிபிஎம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலா ளர் சி.பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.