தஞ்சாவூர், மார்ச் 10- தஞ்சாவூரில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள் ஏற்று மதி ஆணையம், பொன்னி அறக்கட்டளை சார்பில் தஞ்சாவூர் டெல்டா விவசா யிகள் சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய உணவு தொழில் நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநர் (பொ) எம்.லோகநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை., துணைவேந்தர் வெ.கீதா லட்சுமி, வேளாண்மை, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேலாண்மை ஆணைய பொது மேலாளர் ஆர்.ரவீந்திரா, சாஸ்த்ரா பல்கலை., பிரதமர் குறு உணவு பதப்படுத்துதல் தொழில்களை முறைப் படுத்தும் திட்ட முதன்மைச் செயல் அலுவலர் எஸ்.பஞ்சாபகேசன், பொன்னி அறக்கட்டளை செயலர் கே.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.