districts

img

கலாச்சார விழிப்புணர்வு பயணம் தஞ்சை பெரியகோவிலுக்கு கல்லூரி மாணவர்கள் வருகை

தஞ்சாவூர், மே 18-   உலக அருங்காட்சியங்கள் தினத்தை முன்னிட்டு, இந்திய தொல்லியல் துறையின் கோவில் ஆய்வுத்திட்டம், தென் மண்டலத்தின் சார்பில் கோவில் கலை மற்றும் கட்டடக் கலை சார்ந்த கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சாவூர் பெரிய கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.   உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, இந்திய தொல்லியல் துறையின் கீழ் செயல்படும் கோவில் ஆய்வுத்திட்டம் (தென்மண்டலம்) சார்பில் தொல்லியல் துறை கட்டுப் பாட்டில் உள்ள பழமையான இடங்க ளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், மே 17, 18 ஆம் தேதி என இரண்டு நாள் கோவில் கலை மற்றும் கட்டடக் கலைத் துறை சார்ந்த கலாச் சார விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, செவ்வாயன்று முதற் கட்டமாக, கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கலையில் சிறந்து விளங்கும் சின்ன மான தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவி லுக்கு வந்த விருதுநகர் உள்ள தனியார் கல்லூரி, தமிழ் இலக்கிய மாணவர்கள் சுமார் 45 பேர் கலந்து கொண்டனர்.   அவர்களுக்கு தொல்லியல் துறை யின் துணை கண்காணிப்பாளர் குமரன் மற்றும் பிரசன்னா ஆகியோர் சிற்பக் கலை மற்றும் கட்டிடக்கலை பற்றி எடுத்து கூறினார். தமிழ்த்துறைப் பேராசி ரியர்கள் அருணாச்சலம், மாரிராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொடர்ந்து, அய்யம்பேட்டை அருகே புள்ளமங்கை ஆலந்துறை மகாதேவர் கோவில், பட்டீஸ்வரம் பஞ்சவன் மகாதேவி கோவில், கங்கை கொண்ட சோழபுரம், மாளிகைமேடு அக ழாய்வு களம், மலையடிப்பட்டி சிவ மற்றும் பெருமாள் குடைவரைக் கோவில், விசலூர், குடுமியான்மலை, சித்தன்னவாசல் பாண்டியர் குடை வரைக்கோவில், கொடும்பாளூர் மூவர் கோவில் ஆகிய  இடங்களை பார்வை யிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொல் லியல் துறையினர் தெரிவித்தனர்.